Thursday, November 14, 2013

என் வீட்டு தோட்டத்தில்



கீரைத்தண்டு 



பரங்கி செடி 







புடலங்காய் பந்தல் 






கனகாம்பரம்


தேக்கு & புங்க மரம் 


காட்டு மல்லி 




கத்தரி செடி 


சக்கரை வள்ளி கொடி 


கன்னுக்குட்டி 



வெள்ளையன்  



Wednesday, October 30, 2013

அம்மாவின் ஆட்சியில் ஈராண்டில் நூறாண்டு சாதனை

அம்மாவா கொக்கா.
இந்தியாவில் எத்தனை மாநில Governer இருந்தாலும் அவர்கள் எதற்கு இருக்கிறார்கள், என்ன வேலை செய்கிறார்கள் என்று நிறைய பேருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் Governer என்று ஒருவர் இருக்கிறார் என்பதை அனைவருக்கும் தெரியவைத்த பெருமை அம்மாவையே சேரும்.
அம்மாவின் ஆடு புலி ஆட்டத்தில் 11 வது முறையாக அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கிறது. இத்தனை தடவையும் Governer ஐ வேலை வாங்கி, அவருக்கு தாயுள்ளத்தோடு publicity கொடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்தியாவிலேயே Governer ஐ அதிகமாக வேலை வாங்கிய C M  என்ற வரலாறு சாதனை படைத்து இருக்கிறார்.

வாழ்க அம்மாவின் புரட்சி .  
  

Monday, October 14, 2013

TASMAC இன் விளம்பர தூதர் தமிழ் சினிமா

கருணாநிதி தமிழ் வளர்க்கிறேன் என்ற பேரில் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று ஒன்றுக்கும் உருப்படாத படங்களுக்கு வரிச்சலுகை கொடுத்து அரசாங்கத்திற்கு வருவாயை குறைத்தார்.

இந்த அம்மையார் டாஸ்மாக் சரக்கை குடிக்குமாறு எடுத்தால் எதாவது சலுகை தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் போல, சமீபகாலமாக எல்லா தமிழ் படத்திலும் டாஸ்மாக் இல் சரக்கு அடிக்குமாறு படம் எடுக்கிறார்கள். 
எப்படியோ அனைவரையும் குடிக்க வைத்து கருணாநிதியால் இழந்த வருமானத்தை தமிழ் சினிமாவை வைத்தே திரும்ப பெற  வழி செய்துள்ளார் .

இதுதான் புரட்சி.

Monday, May 27, 2013


தமிழர்கள் மிகவும் நன்றி உள்ளவர்கள்.

அமெரிக்காவில் ஒரு நாள் நள்ளிரவு 1 நிமிடம் மின் இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் மின் இணைப்பை கொடுத்தார்கள் . 
அப்போது அந்த ஒரு நிமிடம் எங்குமே வெளிச்சம் இல்லை. 
அமெரிக்க மக்கள் கேட்டார்களாம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று. 
அதற்க்கு இப்படி இருண்டு கிடந்த உலகத்திற்கு வெளிச்சத்தை கொடுத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் . 
அவருக்கு இன்று பிறந்த நாள் . அவருக்கு நன்றி செலுத்தும் விதமாகவே இவ்வாறு செய்தோம் என்று அதிகாரிகள் சொன்னார்களாம். 
ஆனால் அமெரிக்கர்கள் மிகவும் நன்றி குறைந்தவர்கள் அதனால் தான் ஒரு நிமிடம் மட்டும் நன்றி செலுத்தி உள்ளார்கள். 
ஆனால் தமிழர்களாகிய நாம் மிகவும் நன்றி உள்ளவர்கள் தினமும் 14 to 18 மணி நேரம் மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.